
கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர்
கேரளாவில் சுங்கத்துறையில் இணை ஆணையராக இருந்த சச்சின் சாவந்த் என்பவர் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கினார். விசாரணையில் இவருக்கும் நடிகை நவ்யா நாயருக்கும் இடையே நட்பு இருந்தது தெரிய வந்தது. குறிப்பாக நவ்யா நாயருக்கு சச்சின் சாவந்த் பரிசுப்பொருட்கள் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இது குறித்து மறுக்காத நவ்யா நாயர் தங்களிடம் இருப்பது வெறும் நட்பு மட்டுமே என்றும், நட்பு ரீதியாக சில பரிசு பொருட்கள் கொடுத்துள்ளார்.. அவ்வளவுதான் என்று கூறியிருந்தார்.
ஆனாலும் இப்படி அமலாக்கத்துறை விசாரணை வரை நவ்யா நாயரின் பெயர் அடிபட்டதால் கணவன் - மனைவி இருவருக்கும் இதன் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிய இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவின. இதற்கு, நவ்யா நாயர் தனது கணவர், மகன் மற்றும் மாமியாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!