பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் ‛ராதே ஷ்யாம்". ராதா கிருஷ்ண குமார் இயக்கி இருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ராதா கிருஷ்ண குமார் அடுத்து நடிகர் கோபி சந்த்தை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதே கூட்டணியில் ஜில் என படம் வெளிவந்தது. அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!