
தேசிய விருதுகள் படத்தின் தரத்தை தீர்மானிப்பதில்லை : வெற்றிமாறன்
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இயக்குனர் வெற்றி மாறனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: தேசிய விருதுகளை பொறுத்தவரை அதில் எனக்கு தனிப்பட்ட கருத்து உள்ளது. ஒரு படத்தை குறிப்பிட்ட விருதுக்காக அனுப்பும் போது, "அந்த தேர்வுக்குழுவின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்" என்ற ஒப்புதலோடு தான் தேர்வுக்கு அனுப்புகிறோம். எனவே விருது கிடைப்பதும், கிடைக்காததும் அந்த தேர்வுக்குழுவின் முடிவு. அதே போல், ஒரு தேர்வுக்குழுவின் முடிவு எந்த படத்தின் தரத்தையும், சமூக பங்களிப்பையும் தீர்மானிப்பதில்லை.
குறிப்பாக "ஜெய்பீம்" படம் வந்த பிறகு குறிப்பிட்ட அந்த சமூகத்தினரின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த படத்தை தொடங்கியதற்கான நோக்கம் நிறைவேறிவிட்டது. விருது கிடைத்திருந்தால் அது அந்த படக்குழுவிற்கு கூடுதல் சிறப்பைக் கொடுத்திருக்கும். எனவே ஒரு படத்தின் தரத்தை தேர்வுக்குழு முடிவு தீர்மானிக்க முடியாது என்பது எனது கருத்து. அதே போல தேர்வு குழுவின் முடிவிற்கு கட்டுப்படுவதாக கூறி படத்தை அனுப்பிவிட்டு அதன்பிறகு விருது குறித்து விமர்சிப்பதிலும் உடன்பாடில்லை. தேர்வு குழுவில் நம்பிக்கை இல்லாவிட்டால் படங்களை விருதுக்கு அனுப்ப கூடாது.
இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!