
சீரியலில் பேசியது நிஜமாகி போனதா... : மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் இரங்கல்
மாரிமுத்துவின் நிஜ பெயர் மறைந்து போகி அவர் நடித்து வந்த சீரியலின் ஆதி குணசேகரன் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமானது. சமூகவலைதளங்களில் ரசிகர்களும் எதிர்நீச்சல் குணசேகரன் என குறிப்பிட்டே அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரின் பல பேட்டிகளையும் பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு காட்சியில் தனக்கு நெஞ்சு வலிப்பது போன்று கூறுவார் மாரிமுத்து. அதில் உடம்பு வலியா அல்லது மனசு வலியா என தெரியவில்லை. அப்பப்ப வலி வருது, ஏதோ எச்சரிக்கை பண்ணுவது என டயலாக் பேசி இருப்பார். அந்தக்காட்சியை இப்போது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து நிஜமாகவே உங்களுக்கு இப்படி நடந்துவிட்டதே... என தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!