
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா : ஒரு புகைப்படத்தால் மீண்டும் காதல் சர்ச்சை
இந்நிலையில் தற்போது இருவரும் பகிர்ந்த புகைப்படங்களால் காதல் சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. கடந்த வாரம் தனது வீட்டு மாடியில் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. நேற்று ராஷ்மிகாவும் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவர் எடுத்த புகைப்படம் விஜய் தேவரகொண்டா வீட்டு மாடி என ரசிகர்கள் மீண்டும் காதல் கிசுகிசுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
ராஷ்மிகா அவரது உதவியாளர் திருமணத்தில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் அது. அந்த மண்டபத்தின் மாடி போலவே, விஜய் வீட்டின் மாடியும் இருக்காதா என்றெல்லாம் ரசிகர்கள் யோசிக்கவில்லை. இரண்டும் ஒரே இடம்தான் என்கிறார்கள். இந்த ஜோடி எப்போது தங்களது காதலைப் பற்றி சொல்லப் போகிறது என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!