
அனுஷ்கா படத்தை முதல் ஆளாக பார்த்து பாராட்டிய சிரஞ்சீவி
படம் பார்த்துவிட்டு பாராட்டிய சிரஞ்சீவி, "ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அருமையான ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. நவீன் பொலிஷெட்டி இரட்டிப்பு சக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இன்றைய இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது. தேவசேனா அனுஷ்கா ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு வந்தாலும் இப்போதும் அதே அழகுடன் இருக்கிறார். இந்த படத்தை முதல் ஆளாக பார்த்தவன் நான்.. அந்த தருணங்களை உவகையுடன் அனுபவித்தேன். அது மட்டுமல்ல இந்த படம் திரையரங்கில் வெளியாகும்போது ரசிகர்களுடன் இணைந்து மீண்டும் அதே போன்ற அனுபவத்தை பெற தயாராக இருக்கிறேன். இந்த படம் நூறு சதவீதம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை" என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!