
எஸ்.ஜே சூர்யா பேசும் அந்த வசனம் என்னைத்தான் குறிக்கிறது : ஆதிக் ரவிச்சந்திரன்
இந்த நிலையில் தான் விஷாலை வைத்து அவர் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. எஸ்.ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக வெளியான டீசரில் எஸ்.ஜே சூர்யா பேசிய எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கிறேன் என்கிற வசனம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது..
ஆதிக் ரவிச்சந்திரனை பொருத்தவரை அவர் தோல்வி படங்களை கொடுத்தவர், அப்படி அவர் கொடுத்த படங்களிலும் கூட ஆபாச நெடியே அதிகம் இருக்கும் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வந்தன. இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், “நான் பழைய ஆதிக் அல்ல.. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா பேசுவது போல "எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கிறேன்" என்கிற வசனம் உண்மையிலேயே எனக்கான வசனம் தான்” என்று கூறினார்.
அவர் சொன்னதை உறுதிப்படுத்துவது போல படத்தின் நாயகன் விஷால் கூறும்போது, “ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இதுதான் முதல் படம் என்று சொல்லலாம். வரும் செப்டம்பர் 15ல் இருந்து தான் அவரது திரையுலக பயணமே துவங்குகிறது” என்று கூறி உள்ளார். மார்க் ஆண்டனி வெற்றி விஷாலுக்கு மட்டுமல்ல ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஒரு விடியலை தரும் என நம்புவோம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!