
ஹீரோவாக மாறிய மாநகரம் சிறுவன்
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் சுட்டிப்பெண்ணாக அறிமுகமான சாராவுடன் அவரது வகுப்பு தோழனாக இன்னொரு குறும்புக்கார மாணவராகவும் சொல்லப்போனால் அந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாகவும் நடித்த சிறுவன் தான் இந்த ஹமரேஷ். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் படத்திலும் படம் முழுவதும் வரும் கடத்தப்பட்ட சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்தவரும் இவர்தான்.
இந்த நிலையில் தற்போது ரங்கோலி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். பள்ளி மாணவர்களின் காதல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள திரை உலகை சேர்ந்த இளம் நடிகை பிரார்த்தனா அறிமுகம் ஆகி உள்ளார். தனது மாமன்மார்களைப் போல இவரும் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பாரா ? பொறுத்திருந்து பார்க்கலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!