
கதை சொல்வதற்கு முன்பே ரஜினிக்கு அதிர்ச்சி தந்த நெல்சன்
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது பீஸ்ட் படத்திற்கு சரியான வரவேற்பு இல்லை என்பதால் நெல்சன் திலீப்குமாரை மாற்றலாம் என பலரும் கூறினார்கள். ஆனாலும் அவர்தான் இயக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன். இந்த படத்தின் கதையை சொல்வதற்காக காலை 10 மணிக்கு வருமாறு நெல்சனுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தேன். ஆனால் அவர் நான் நீண்ட நேரம் தூங்குபவன் என்பதால், 11.30 மணிக்கு வருகிறேன் என்று கூறினார். ஆனாலும் அவர் 12 மணிக்கு தான் எனது வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு படத்தின் ஒரு வரி கதையை கூறினார். பத்து நாட்கள் கழித்து வந்து முழு கதையையும் சொன்னார். ரொம்பவே பிடித்திருந்தது. படத்தை துவங்கி விட்டோம்" என்று கூறினார்.
அந்த வகையில் ரஜினியின் பட வாய்ப்பு கிடைப்பதற்கு உறுதியாவதற்கு முன்பே, பங்சுவாலிட்டி விசயத்தில் பெயர் போன ரஜினிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் நெல்சன் திலீப் குமார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!