
ஆந்திர முதல்வராக நடிக்கிறார் ஜீவா
முதல்பாக கதையில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி சிறுவனாக இருந்தார். இந்த பாகத்தில் அவர் கல்லூரி மாணவன் மற்றும் அரசியலுக்குள் நுழையும் தருவாயில் உள்ளவராக வருகிறார். அவரது கேரக்டரில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. பின்னர் ஏனோ அந்த திட்டம் கைவிடப்பட்டு தற்போது ஜீவா நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக ஐதராபத்தில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டு அது திருப்திகரமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. விரைவில் ஜெகன்மோகன் ரெட்டி தோற்றத்தில் ஜீவா இருக்கும் படத்துடன் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!