
பண்ணாரி அம்மன் கோவிலில் சமந்தா வழிபாடு
சிகிச்சைக்கு செல்வதற்கு முன் சமந்தா முக்கிய கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபுரம் தங்க கோவிலில் வழிபாடு நடத்தினார். பழனிக்கு சென்று வழிபட்டார். அடுத்ததாக அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
“பண்ணாரி அம்மன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு நடிகைகள் தரிசனத்துக்கு வருவது மிகவும் குறைவு. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தால் வருவார்கள். ஆனால் சமந்தா சாமி தரிசனத்திற்காகவே வந்தார். மனமுருகி பிரார்த்தனை செய்தார். சக்தி வாய்ந்த அம்மன் சமந்தாவுக்கு பூரண உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் தருவாள்” என்றார் கோவில் பூசாரி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!