
ராஜசேகர் - ஜீவிதா தம்பதியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை
சிரஞ்சீவியின் மைத்துனரும், தயாரிப்பாளரும், அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் தொடர்ந்து அவதூறு வழக்கு ஒன்றில் ராஜசேகர், ஜீவிதா தம்பதியருக்கு நம்பள்ளி, 17வது கூடுதல் தலைமை மெட்ரோபலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஒரு ஆண்டு தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு சிரஞ்சீவி மீதும், சிரஞ்சீவி ரத்த வங்கி மீதும் ரத்தத்தை விற்பதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால் அவர்கள் மீது அல்லு அரவிந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராஜசேகர், ஜீவிதா ஆகியோர் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டிய அவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!