
ரஜினி படத்தில் இப்படி பாடல் வரிகள் வரலாமா, ரசிகர்கள் கேள்வி
ரஜினிகாந்த் போன்ற ஒரு சீனியர் நடிகரின் படத்தில் இப்படிப்பட்ட பாடல் வரிகள் இடம் பெறலாமா என்றும் அவர்கள் கேட்கின்றனர். “சூப்பர் ஸ்டார்” பட்டத்திற்கு ஆசைப்படும் சில நடிகர்களைக் குறி வைத்தே அப்பாடல் எழுதப்பட்டுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா”, “உன் அலும்ப பார்த்தவன்”, “இவன் பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு,” போன்ற வரிகள் எல்லாம் ரஜினி படப் பாடலில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் “சூப்பர் ஸ்டார்” பட்டத்திற்கு ஆசைப்படும் இன்றைய நடிகர்களுக்கு ரஜினிகாந்த் இப்பாடல் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருதுகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!