
டொவினோ தாமஸ் படத்தில் இணையும் திரிஷா
இதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மூன்றாவதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான பாரன்சிக் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.. இந்த படத்தை அகில் பால் மற்றும் அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அவர்கள் மீண்டும் டொவினோ தாமஸ் நடிப்பில் ஐடென்டி என்கிற படத்தை இயக்க உள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனராம். அனேகமாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்னொரு கதாநாயகியாக முக்கிய வேடத்தில் மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!