
ஹன்சிகாவிடம் சொல்ல மறந்து விட்டாரா ஆதி?
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள ஆதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரகத நாணயம் என்கிற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நாயகி நிக்கி கல்ராணி திடீரென இதுபோன்று நடிகர் முனீஸ்காந்தின் ஆவி புகுந்தது போல மாறி அவரைப் போலவே நடந்து கொள்வார். இந்த விஷயத்தை ஹன்சிகாவுக்கு ஆதி சொல்லவில்லையா ? இல்லை அவரும் மறந்து விட்டாரா?
அதேபோல மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதிகாசா என்கிற திரைப்படம் வெளியானது. வெவ்வேறு இடங்களில் வசிக்கும் அந்த படத்தின் நாயகன் நாயகியும் புராதான கால சம்பந்தப்பட்ட இரண்டு மோதிரங்களை ஒன்றாக அணியும்போது நாயகன் இங்கே நாயகியாகவும் அங்கே நாயகி நாயகன் போன்றும் உருமாறி இருப்பார்கள். இருவரும் கிட்டத்தட்ட படம் முழுவதும் தங்களது உடல்மொழியை மாற்றி நடித்திருப்பார்கள். அதனால் ஹன்சிகா நடித்திருக்கும் கதாபாத்திரம் சினிமாவுக்கு ஒன்று புதிதல்ல.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!