
ஜெய்ப்பூரில் நடந்த எங்கேயும் எப்போதும் சர்வானந்த் திருமணம்
மணப்பெண் ரக்ஷிதா ரெட்டி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சரான பொஜ்ஜல கோபால கிருஷ்ண ரெட்டி என்பவரின் பேத்தி தான் ரக்ஷிதா. இவரது அப்பா மதுசூதன் ரெட்டி உயர்நீதிமன்ற வக்கீலாக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற ஹால்டி, சங்கீத் நிகழ்வுகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. தற்போது திருமணப் புகைப்படங்களும் வெளிவந்துள்ளது. ஜுன் 9ம் தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!