
ஹேப்பி பிரதர்ஸ் டே : அருள்நிதி வெளியிட்ட போட்டோ
இதனிடையே சென்னையில் நடைபெறும் அனைத்து பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகிறார் உதயநிதி. சென்னை - குஜராத் அணிகள் மோதிய பிளே ஆப் சுற்று போட்டியை கண்டுகளித்தார் உதயநிதி. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியை உதயநிதியுடன் அவரது சகோதரர்களான தயாநிதி, அருள்நிதியும் கண்டுகளித்துள்ளார்கள்.
மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை தனது வெளியிட்டு, ‛‛ஹேப்பி பிரதர்ஸ் டே என்றும் பதிவிட்டு தனது சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அருள்நிதி. மே 24ம் தேதியான இன்று பிரதர்ஸ் டே கொண்டாடப்பட்டு வருவதால் இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!