
என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை! : நடிகர் சரவணனின் மனைவி புகார்
அதையடுத்து மீடியாக்களை சந்தித்த அவர், தனது நகைகளை விற்று வாங்கிய வீட்டில் இருந்து தன்னை சரவணன் வெளியேறச் சொல்வதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். அதோடு என்னை காதலித்து திருமணம் செய்த சரவணனை பருத்திவீரன் படத்துக்கு முன்பு வரை நான் தான் சம்பாதித்து பார்த்துக் கொண்டேன். இப்போது எனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை. நான் சம்பாதித்து அவர் பெயரிலேயே வாங்கினேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இப்போது என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு என்ன நடந்தாலும் சரவணன்தான் காரணம் என்று சூர்யா ஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!