
சோசியல் மீடியாவுக்கு குட்பை சொன்ன நஸ்ரியா
இன்னொரு பக்கம் அவர் படங்களில் நடிக்காத சமயத்தில் கூட சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்தார். தன்னை பற்றிய செய்திகள், தனது கணவர் மற்றும் தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றை, தொடர்ந்து சோசியல் மீடியா மூலம் ரசிகர்களின் பார்வைக்கு கடத்தி வந்தார் நஸ்ரியா. லட்சக்கணக்கான பாலோயர்களை கொண்ட நஸ்ரியா, தற்போது சோசியல் மீடியாவின் அனைத்து தளங்களில் இருந்தும் ஒரு பிரேக் எடுத்துக் கொள்வதாக திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து சோசியல் மீடியாக்களில் இருந்தும் பிரேக் எடுத்து கொள்கிறேன். இதுதான் நேரம்.. உங்களுடைய அன்பையும் குறுஞ்செய்திகளையும் இங்கே நான் மிஸ் பண்ணுவேன். மீண்டும் விரைவில் சந்திப்போம். உறுதி அளிக்கிறேன்..” என்று கூறியுள்ளார்.
படங்களில் பிசியாக நடிக்கும் நடிகைகளே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் படம் எதிலும் நடிக்காத நஸ்ரியா இப்படி திடீரென சோசியல் மீடியாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!