
24 மணி நேர மாநாடு.. 48 மணி நேர கஸ்டடி ; வெங்கட்பிரபு டைம் லைன்
இந்த நிகழ்வில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, "கஸ்டடி திரைப்படம் நான் இதுவரை செய்திராத புதிய ஜானரில் ஒரு புதிய முயற்சி. குறிப்பாக இந்த படத்தில் வில்லன் சாகக்கூடாது என்பதுதான் ஹீரோவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். 48 மணி நேரத்தில் நடக்கும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தில் ஹீரோவும், வில்லனும் மொத்தமே இரண்டு செட் உடைகள் தான் அணிந்து நடித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் 24 மணி நேரத்திற்குள் நடக்கும் கதையாக உருவாகி இருந்தது. அந்தப் படத்திலும் வில்லன் எஸ்.ஜே சூர்யா படத்தின் நாயகன் சிம்புவை சாக விடாமல் பார்த்துக் கொள்வது தான் அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்காக இருந்தது என்பது ஆச்சரிய ஒற்றுமை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!