
‛டாணாக்காரன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் நெகிழ்ச்சி
போலீஸ் தொடர்பான கதை என்றாலும் வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வேறு மாதிரியான கதையில் வெளியானது. அதாவது போலீஸ் பயிற்சியில் நடக்கும் விஷயங்களை கதைக்களமாக கொண்டு இந்தபடம் எடுக்கப்பட்டு இருந்தது. கடந்த வருடம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெற்றதால் இயக்குனர் தமிழ் தனது டுவிட்டர் பக்கத்தில்; டாணாக்காரன் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைகிறது. வெற்றிக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்வதில் பெருமை கொள்கிறோம் நன்றி,‛‛ என பதிவிட்டிருந்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!