
தங்கலான் அப்பேட்: 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவு
இந்த நிலையில் நேற்று நடந்த "பிகே ரோசி" திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் படம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கேஜிஎப்பில் மிகப்பெரிய போர்ஷனை எடுத்து முடித்துள்ளோம். 55 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. படப்பிடிப்பு மே மாதம் முடிந்துவிடும்.
கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளோம். படப்பிடிப்பு கடும் சவாலாக இருந்தது. இரவு பகல் பார்க்காமல் உழைத்திருக்கிறோம். இந்தப் படம் மக்களுக்கு பிடிக்கும். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும். அடுத்த என்ன படம் என்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. கமல் நடிக்கும் படத்திற்கான கதையையும், "சர்பட்டா பரம்பரை" 2ம் பாகத்திற்கான கதையையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!