
சூர்யா படத்தை 150 நாட்களில் முடிப்பேன் ; லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு
அதேசமயம் விக்ரம் படத்தில் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்கிற கான்செப்ட்டை மையப்படுத்தி அந்த படத்தை எடுத்திருந்ததால் லியோவுக்கு அடுத்ததாக அவர் கைதி இரண்டாம் பாகத்தையோ அல்லது விக்ரம் இரண்டாம் பாகத்தையோ எடுப்பார் என்றும் அல்லது அந்த படத்தின் இறுதிக்காட்சியில் மட்டுமே வந்து கைதட்டலை அள்ளிச்சென்ற சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்குவார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், கமல், சூர்யா மூவருமே மேடையில் ஒன்றாக தோன்றினர். அப்போது லோகேஷ் கனகராஜ் பேசும்போது, நிச்சயமாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவேன் என்றும் அதை 150 நாட்களில் முடிப்பேன் என்றும் கூறியுள்ளார். அதே சமயம் அது சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகும் படமாக இருக்குமா அல்லது வேறு புதிய கதையா என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!