
ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கை ஒரே நாளில் திரும்பப்பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது என்று அவரது மக்கள் செய்தி தொடர்பாளர் ஒரு தகவலை வெளியிட்டார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் கணக்கு மீண்டும் விரைவில் திரும்ப பெறப்படும் என்றும் அதுவரை அதில் வெளியாகும் பதிவுகளுக்கு ரசிகர்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இது குறித்து டுவிட்டர் உரிமையாளரான எலன் மாஸ்க்கிற்கும் புகார் ஒன்றை அனுப்பி, ஐஸ்வர்யா ராஜேஷின் டுவிட்டர் கணக்கை விரைவில் மீட்டு தந்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோளும் வைத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த நாளே ஹேக் செய்யப்பட்ட தனது டுவிட்டர் கணக்கு தன்வசம் வந்து விட்டதாக கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!