
அயோத்தி கதை பிரச்சனையில் சுமூக முடிவு
அதேசமயம் படம் வெளியாகி சில நாட்கள் கழித்து இந்த படத்தின் கதை தான் 2011ல் தனது வலைப்பக்கத்திலும் மேலும் தனது முகநூல் பக்கத்திலும் தான் எழுதிய, தனது நண்பர் ஒருவருக்கு நிகழ்ந்த உண்மை சம்பவத்தை, அப்படியே தழுவி எடுக்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் மாதவராஜ் என்பவர் புகார் தெரிவித்தார்.. ஆனால் இது பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தரப்பிலிருந்து பதில் வராவிட்டாலும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மந்திரமூர்த்தி ஆகியோர் இந்த விஷயத்தை பெரிதாக்க விரும்பவில்லை.
இந்த நிலையில் இந்த கதையை எழுதியதாக சொல்லப்படும் மாதவராஜை அழைத்து தயாரிப்பாளர், இயக்குனர் மந்திரமூர்த்தி இருவரும் அவரிடம் பேசி இந்த படம் ஓடிடியில் வெளியாகும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு டைட்டில் கார்டில் அவர்களது பெயருக்கு அங்கீகாரம் கொடுப்பதாக கூறி உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து இந்த கதை விவகாரம் தற்போது சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!