
35 நாட்களில் 3 படங்கள் ; தொடர் அதிரடிக்கு தயாராகும் பிரியா பவானி சங்கர்
இந்த நிலையில் வரும் 35 நாட்களில் பிரியா பவானி சங்கர் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இது சமீபத்தில் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒரு பெருமை என்றே சொல்லலாம். வரும் மார்ச் 10ஆம் தேதி ஜெயம் ரவி ஜோடியாக இவர் நடித்துள்ள அகிலன் திரைப்படம் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 30ல் சிம்பு, கவுதம் கார்த்திக்குடன் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள பத்து தல படம் வெளியாகிறது.
அடுத்ததாக ஏப்ரல் 14ம் தேதி ராகவா லாரன்ஸ் ஜோடியாக இவர் இணைந்து நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்து இந்தியன் 2, பொம்மை, டிமான்டி காலனி 2, ஜீப்ரா (தெலுங்கு) என கைவசம் நிறைய படங்களும் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். அந்தவகையில் இந்த 2023 இவருக்கான வருடம் என தாராளமாக சொல்லலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!