
மீண்டும் தமிழில் வெளிச்சத்திற்கு வரும் சுவாசிகா
கடந்த 2009ல் வெளியான அந்த படத்தில் விசாகா என்கிற பெயரில் தான் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சாட்டை படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருந்த இவர் அதன்பிறகு பெரும்பாலும் தமிழில் அடையாளம் தெரியாமல் வந்துபோன சில படங்களில் தான் நடித்துள்ளார். அதேசமயம் மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாகவும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். கடந்த வருடத்தில் மட்டும் ஒன்பது படங்களில் நடித்துள்ளார். அவற்றில் மோகன்லால், மம்முட்டி, திலீப் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களும் உண்டு.
குறிப்பாக கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான ஆராட்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை விட அந்த படத்தில் சுவாசிகாவுக்கு தான் அதிக முக்கியத்துவமும் காட்சிகளும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ஒரு பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில் ஓரளவுக்கு பிரபலமான ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெற்றுள்ளார் சுவாசிகா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!