
நாளை நான்கு மொழிகளில் வெளியாகும் ஆன்ட்மேன் 3
2015ம் ஆண்டு "ஆன்ட்மேன்" என்ற பெயரிலேயே முதல் பாகத் திரைப்படம் வெளிவந்தது. அக்கதாபாத்திரத்தில் பால் ருட் நடித்திருந்தார். முதல் பாகம் சுமார் 150 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் தயாராகி 500 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தது. இரண்டாம் பாகம் "ஆன்ட் மேன் மற்றும் த வாஸ்ப்" என்ற பெயரில் 2018ம் ஆண்டு வெளிவந்தது. 190 மில்லியன் பட்ஜெட்டில் தயாராகி 600 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்தது.
இப்போது மூன்றாம் பாகம் "ஆன்ட் மேன் மற்றும் த வாஸ்ப் - குவான்டமேனியா" என்ற பெயரில் நாளை(பிப்., 17) இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. மூன்று பாகங்களையும் பேடோன் ரீட் இயக்கியிருக்கிறார்.
சுமார் 200 மில்லியன் யுஎஸ் டாலர் பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 500 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தால்தான் இந்தப் படம் லாபம் அடைய முடியும் என்கிறார்கள். முந்தைய இரண்டு பாகங்களைப் போல இந்த மூன்றாவது பாகமும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால், படம் சுமாராகத்தான் இருக்கிறது என வெளிநாட்டு பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!