
நான் நயன்தாராவை சொல்லவில்லை - மாளவிகா மோகனன் விளக்கம்
சமீபத்தில் ஒரு பேட்டியின் போது, ‛‛ஒரு படத்தில் மருத்துவமனை காட்சியில் நடித்தபோது முழு மேக்கப் உடன் தலை முடிகள் கூட கலையாமல் நடிகை ஒருவர் நடித்ததார்"" என நயன்தாரா பெயரை சொல்லாமல் விமர்சித்து இருந்தார் மாளவிகா.
இதற்கு நயன்தாரா ஒரு பேட்டியில், ‛‛ரியலிஸ்டிக் படங்களுக்கும், கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் நடிப்பது கமர்சியல் படம் என்பதால்தான் அப்படி நடித்தேன்"" என பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் இப்போது ஒரு பேட்டியில் ‛லேடி சூப்பர் ஸ்டார்" பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள மாளவிகா மோகனன், “உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கையில்லை. பெண்களை சூப்பர் ஸ்டார் என அழைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்கள் தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே” என்றார்.
இவரின் இந்த பேட்டி வைரலானது. நயன்தாராவை தான் மீண்டும் மாளவிகா மோகனன் சீண்டுகிறார் என ரசிகர்கள் அவரை வசைப்பாடினர். இந்தநிலையில் இதுபற்றி ஒரு பதிவு போட்டுள்ளார் மாளவிகா. அதில், ‛‛நான் எந்த ஒரு நடிகையையும் குறிப்பிட்டு அப்படி கூறவில்லை. பெண் நடிகைகள் பற்றி எனது கருத்தை தெரிவித்தேன். நயன்தாராவை மிகவும் நான் மதிக்கிறேன். மூத்த நடிகையாக அவரது திரையுலக பயணத்தை பார்த்து வியக்கிறேன். கொஞ்சம் மக்கள் அமைதியாக இருங்கள்"" என குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!