
பான் இந்தியா நடிகர் என சொல்வது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது : விஜய் சேதுபதி
சமீப காலமாக அவரை பான் இந்தியா நடிகர் என்று திரையுலகினர் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் இப்படி பான் இந்திய நடிகர் என குறிப்பிட வேண்டாம் என்றும், அந்த வார்த்தை தனக்கு மிகுந்த அழுத்தத்தை தருகிறது என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் விஜய்சேதுபதி.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் ஒரு நடிகர், அதனால் நடிகர் என்று மட்டும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். பான் இந்திய நடிகர் என்கிற வார்த்தை எனக்கு மட்டுமல்ல, சில இயக்குனர்களுக்கு அவ்வளவு ஏன் அந்தப்பெயரில் உருவாகும் படங்களுக்கு கூட மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. என்னை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடிக்க விரும்புகிறேன். குஜராத்தி, பெங்காலி படங்களில் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஒப்புக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!