
மனநிலை பாதிக்கப்பட்தாக வதந்தி : ஸ்ருதிஹாசன் பதிலடி
சில தினங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்தின் புரமோஷன் ஐதராபாத்தில் நடைபெற்றபோது அதில் ஸ்ருதிஹாசன் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்கு மனநல பிரச்னை ஏற்பட்டதின் காரணமாகத்தான் அவர் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அது குறித்து உடனடியாக ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், ‛‛எனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதினால் தான் வால்டர் வீரய்யா படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். மேலும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் பரப்பப்பட்ட செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, நல்ல முயற்சி என்றும் அதற்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!