
வழுக்கி விழுவோமோ என பயந்தேன் : ஷோபனாவின் மலரும் நினைவுகள்
அந்த படத்தில் கங்கா மற்றும் நாகவல்லி என்கிற கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஷோபனா நாகவல்லி கதாபாத்திரமாக மாறி "ஒரு முறை வந்து பார்த்தாயா" என்கிற தமிழ் பாடலுக்கு கிளைமாக்ஸில் ஆவேசமாக நடனமாடி இருப்பார். தற்போது தான் நடத்தி வரும் நடன பயிற்சி பள்ளியில் தனது மாணவிகளுக்கு அந்த பாடலுக்கான நடனத்தை சொல்லித்தரும் ஷோபனா, அதுகுறித்தும் அந்த பாடல் படமாக்கப்பட்ட சமயத்தில் நடந்த விஷயங்கள் குறித்தும் ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஷோபனா கூறும்போது, “அந்த பாடல் நவராத்திரி மண்டபத்தில் படமாக்கப்பட்டது. அதன் தரைத்தளம் முழுவதும் ஜொலிக்கும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெய் சேர்த்து துடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதில் துள்ளிக்குதித்து நடனமாடுவதற்கு எனக்கு பயமாக இருந்தது. வழுக்கி விழுந்து விடுவோமோ என்கிற அளவிற்கு தரை மிகவும் வழுவழுப்பாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல என்னுடன் ஆடிய ஸ்ரீதருக்கும் அந்த பயம் இருந்தது. இருந்தாலும் சமாளித்து ஆடினோம்” என்று கூறியுள்ளார்





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!