
5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் தாமிரபரணி பானு படம்
5 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த படம் சகுந்தலாவின் காதலன். இந்த படத்தை காதலில் விழுந்தேன், எப்படி மனசுக்குள் வந்தாய் படங்களை இயக்கிய பி.வி.பிரசாத் இயக்கினார். ஒரு திருடனிடம் தனது சங்கிலியை பறிகொடுத்த பெண் அதனை எப்படி அவனிடம் இருந்து மீட்கிறாள் என்பதுதான் படத்தின் கதை. திருடனாக இயக்குனர் பி.வி.பிரசாத்தும், பறிகொடுத்து பெண்ணாக பானுவும் நடித்தனர். தயாரிப்பாளரின் பல பிரச்சினைகள் காரணமாக முடங்கி கிடந்த இந்த படம் வருகிற 30ம் தேதி வெளிவருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!