
காசேதான் கடவுளடா பாடல்.... டிரோல்களை ரசித்தேன் என்கிறார் மஞ்சுவாரியர்
வருகிற பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் முதல் பாடலாக "சில்லா சில்லா" வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது வரை 20 மில்லியனுக்கு அதிகமானபேர் இந்த பாடலை ரசித்துள்ளனர். நேற்று இதன் இரண்டாவது பாடலான "காசேதான் கடவுளடா" பாடலை வெளியிட்டனர். பணத்தை முன்னிலைப்படுத்தி துள்ளல் பாடலாக அமைந்துள்ளது. இதை வைசாக், ஜிப்ரான் மற்றும் மஞ்சுவாரியர் இணைந்து பாடி உள்ளனர். 20 மணிநேரத்தில் 44 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் இந்த பாடலுக்கு கிடைத்துள்ளது.
இதனிடையே இந்த பாடலில் மஞ்சுவாரியர் பாடியிருக்கிறார். ஆனால் அவரின் குரல் சரியாக கேட்கவில்லை. கோரஸாக வரும் குரலில் ஆண் குரல் தான் அதிகம் ஒலிக்கிறது. இதை வைத்து அவரை நிறைய பேர் டிரோல் செய்தனர். ஏகப்பட்ட மீம்ஸ்களை போட்டு அவரை டிரோல் செய்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள மஞ்சுவாரியர், ‛‛இந்த பாடலில் என் குரல் கேட்கவில்லை என்று கவலைப்படுபவர் கவலை பட வேண்டாம். அது வீடியோ பாடலுக்காக ரெக்கார்ட் செய்யப்பட்டு உள்ளது. உங்களது அக்கரைக்கு நன்றி. டிரோல்களை நான் ரசித்தேன்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!