
அதிகமாக நீந்த வேண்டும் இல்லையென்றால் மூழ்கிவிடுவார்கள் - பாலிவுட்டை எச்சரிக்கும் ராஜமவுலி
டிச 17, 2022
Advertisement
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிடுவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அதோடு உலகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து இந்திய படங்கள் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவது ஏன் என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: பாலிவுட் சினிமாவுக்குள் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர ஆரம்பித்ததும், நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அதிக சம்பளம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற பசி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன. ஆனால் முக்கிய நடிகர்கள் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின.
பார்வையாளர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு இயங்குவதே வெற்றிக்கான ஒரே மந்திரம். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோன்ற சூழல் பாலிவுட் திரையுலகுக்கு வேண்டும் என்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும். இல்லையென்றால் மூழ்கிவிடுவார்கள்.
ராஜமவுலியன் இந்த வெளிப்படையான கருத்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: பாலிவுட் சினிமாவுக்குள் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர ஆரம்பித்ததும், நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அதிக சம்பளம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற பசி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன. ஆனால் முக்கிய நடிகர்கள் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின.
பார்வையாளர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு இயங்குவதே வெற்றிக்கான ஒரே மந்திரம். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோன்ற சூழல் பாலிவுட் திரையுலகுக்கு வேண்டும் என்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும். இல்லையென்றால் மூழ்கிவிடுவார்கள்.
ராஜமவுலியன் இந்த வெளிப்படையான கருத்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!