
21 லட்சம் மோசடி: விஜய் தந்தையிடம் போலீஸ் விசாரணை
பின்னர் அந்த படத்தை தானே வெளியிட்டதாகவும் அதற்காக பெற்ற 21 லட்சம் ரூபாய் பணத்தைத் திரும்பித் தராமலும் எஸ்.ஏ.சந்திரசேகர் மோசடி செய்துவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பிரம்மானந்தம் சுப்பிரமணியம் சார்பில் மணிமாறன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கிய 21 லட்ச ரூபாய் பணத்தை வட்டியுடன் சேர்த்து 27 லட்சம் ரூபாயை பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தைக் கொடுக்காமல் தனக்கும் வெளிநாட்டு வாழ் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மணிமாறன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இது தொடர்பாக விரைவில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!