
19 ஆண்டுகள் எந்த பின்புலமும் இல்லாத பயணம் : பரத்
தனது 50வது படம் குறித்து பரத் கூறியிருப்பதாவது: எல்லா மொழிகளிலும், எல்லா படத்தையும் கணக்கிடும்போது இது எனக்கு 50 படம் என்பதில் மகிழ்ச்சி. நான் காதல் படத்தின் மூலம்தான் ஹீரோவானேன். எனது 50வது படம் அதே டைட்டிலுடன் வெளியாவது கூடுதல் மகிழ்ச்சி. சினிமாவுக்கு வந்து 19 ஆண்டுகள் ஆகிறது. முதல் படம் தொடங்கி இப்போது வரை எந்த பின்புலமும் இல்லாமல் நான் தனித்தே பயணம் செய்திருக்கிறேன். அதில் வெற்றியையும், தோல்வியையும் சந்தித்திருக்கிறேன். இரண்டையும் சமமாக கருதுவதால் நிதானமாக பயணிக்க முடிகிறது. அடுத்து முன்னறிவான் என்ற படத்திலும் வசந்தபாலன் இயக்கும் படத்திலும் நடிக்கிறேன்.
லவ் படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன், அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். இப்படம் ரசிகர்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!