
டிச-16ல் வெளியாகும் நண்பகல் நேரத்து மயக்கம்
நவ 23, 2022
Advertisement
மலையாளத் திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே வித்தியாசமான கதைக்களங்களில், வித்தியாசமான மனிதர்களின் வாழ்க்கை முறைகளை படமாக எடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. இவர் இயக்கிய அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இவர் தற்போது மம்முட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் மலையாளத்தில் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தப் படம் முழுவதுமே தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ளதுடன் முக்கால்வாசி படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் மலையாளத்தில் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தப் படம் முழுவதுமே தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ளதுடன் முக்கால்வாசி படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!