
துணிவை தொடர்ந்து வாரிசு படத்தையும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்!
ஆனபோதிலும் விஜய்யின் வாரிசு படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களுக்கு வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் -அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் இரண்டு படங்களுக்கும் சம அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதேபோல் தற்போது சென்னை மற்றும் செங்கல்பட்டு இரண்டு ஏரியாக்களுக்கு விஜய் -அஜித் படங்களுக்கு சம அளவு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறதாம். அதனால் கூடிய சீக்கிரமே அஜித் - விஜய் படங்கள் தமிழகம் முழுக்க எந்தெந்த தியேட்டர்களில் வெளியாக போகிறது என்பது குறித்து தகவல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!