
ஜவான் கதை விவகாரம் : ஆதாரம் கேட்கும் தயாரிப்பாளர் சங்கம்
இந்தநிலையில் அவர் பாலிவுட்டில் இயக்கி வரும் ஜவான் படம் எனது தயாரிப்பில் உருவான விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை தழுவி தான் உருவாகிறது என அதன் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், மாணிக்கம் நாராயணனிடம் அவர் சொல்லும் புகாருக்கு, அவர் வைத்துள்ள ஆதாரங்களை கொண்டுவந்து சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. அதனை பரிசீலித்த பின்னரே ஜவான் படத்தின் கதை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் ஜவான் படத்திற்கும் பேரரசு படத்திற்கும் படத்தின் ஹீரோ இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது மட்டுமே ஒற்றுமை என்றும், பேரரசு படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரி மற்றும் ஆக்ரோச இளைஞர் என்கிற கதாபாத்திரங்களில்ல் நடித்திருந்தார். இந்த ஜவான் படத்தில் ஷாருக்கான் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார் என்பதால் இரண்டு படத்திற்கும் கதையில் ஒற்றுமை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!