
சமந்தாவிடம் நலம் விசாரித்த நாக சைதன்யா?
தன் சக நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. பிரிவுக்குப் பின் அந்த ஜோடி தங்களது திருமண வாழ்க்கைப் பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா விரைவில் குணமடைய அவரது மைத்துனர் நடிகர் அகில் அப்போதே சமந்தாவின் பதிவில் கமெண்ட் போட்டிருந்தார்.
அவரை அடுத்து அகிலின் அண்ணன் நாக சைதன்யா, அப்பா நாகர்ஜுனா இருவரும் சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதன்பின் நாக சைதன்யா, நாகார்ஜுனா இருவரும் சமந்தாவை நேரில் சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.
ஆனால், இருவரும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் சமந்தாவை நேரில் சந்திக்கச் செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் நாக சைதன்யா, சமந்தாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளதாக டோலிவுட்டில் ஒரு தகவல் பரவியுள்ளது. என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என நாக சைதன்யா சொன்னதாகவும் சொல்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!