
சினேகன் புகார் : ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு
இந்த புகாரை தொடர்ந்து சினேகன் மீது கமிஷனர் அலுவலத்தில் ஜெயலட்சுமி புகார் செய்திருந்தார். அப்போது தான் நடத்தி வரும் அறக்கட்டளையின் ஆதாரங்களை வெளியிட்ட ஜெயலட்சுமி, சினேகன் பொய் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையே நடிகை ஜெயலட்சுமி மீது கொடுக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சினேகன் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சினேகன் அறக்கட்டளை பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூலித்து மோசடி செய்ததாக திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க போலீஸ் முன் ஆஜராகுமாறு ஜெயலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்ட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!