
வினியோகஸ்தர்களுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்த லைகர் இயக்குனர்
அதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குனருமான பூரி ஜெகன்னாத்திடம் நஷ்ட ஈடு கேட்டனர் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்கள். அதற்கான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிவடையாத நிலையில் பூரி ஜெகன்னாத் வீட்டை முற்றுகையிடப் போவதாக வினியோகஸ்தர்கள் வாட்சப் மூலம் தகவலைப் பரப்பினர். அதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தார் இயக்குனர் பூரி ஜெகன்னாத்.
இந்நிலையில் தன்னை சட்ட விரோதமாக துன்புறுத்தி பணத்தைப் பெற, பிளாக் மெயில் செய்வதாகவும், படத்தின் வினியோகஸ்தர்களான வாரங்கல் சீனு, மற்றும் பைனான்சியர் சோபன் ஆகியோர் மீது ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர்கள் இது தொடர்பாக சட்டப்படி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும், அதை விடுத்து என்னை மிரட்டக் கூடாது. நான் தற்போது மும்பையில் இருப்பதால் ஐதராபாத்தில் இருக்கும் எனது வீட்டில் உள்ள வயதான எனது மாமியார், மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!