
வெங்கட்பிரபு நாகசைதன்யா படப்பிடிப்பில் பிரச்சனை
கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் உள்ள மேலக்கோட் பகுதியில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கே உள்ள கிராமம் ஒன்றில் மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டு அங்கே காட்சிகள் படமாக்கப்பட்டன. அதேசமயம் இந்த படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே அங்குள்ள மக்கள் வழிபடும் ராய கோபுர கோவில் ஒன்று உள்ளது. உள்ளூர் மட்டுமல்லாது வெளியூரில் இருந்தும் இந்த கோவிலுக்கு தினசரி பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதேசமயம் அப்படி அவர்கள் வந்து செல்லும் வழியில் படப்பிடிப்பிற்காக போடப்பட்ட மதுபான பார் செட் மற்றும் அதில் படமாக்கப்பட்ட காட்சிகள் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஒரு கட்டத்தில் அப்படி போடப்பட்டிருந்த அந்த செட்டையும் உடைத்து நொறுக்கி உள்ளனர் என்று சொல்லப்படுகிறது..
அந்த பகுதியில் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முறைப்படி அனுமதி வாங்கி இருந்தாலும் அதையும் தாண்டி படப்பிடிப்பு நீடித்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல கோவில் அருகில் இப்படி ஒரு காட்சியை படம் பார்க்கப் போகிறோம் என்பது பற்றியும் படக்குழுவினர் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த களேபரங்கள் நடந்த சமயத்தில் படத்தின் ஹீரோ நாகசைதன்யா செட்டில் தான் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் படக்குழுவினர் தரப்பில் இருந்து இது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!