
மற்றுமொரு பிரம்மாண்ட படத்தில் பிரபாஸ் ?
அக் 10, 2022
Advertisement
"பாகுபலி" படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகரான பிரபாஸ் பான் இந்தியா நடிகராக மாறினார். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த "சாஹோ, ராதேஷ்யாம்" ஆகியவை தோல்வியைத் தழுவினாலும் பிரபாஸுக்கு பிரம்மாண்ட படங்களின் வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது.
தற்போது பிரம்மாண்டப் படங்களான "ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் "ஆதி புருஷ்" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாருதி இந்தப் படத்தை இயக்குகிறாராம். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல். வில்லனாக நடிக்க ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திடம் பேசி வருகிறார்களாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தமாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
தற்போது பிரம்மாண்டப் படங்களான "ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் "ஆதி புருஷ்" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாருதி இந்தப் படத்தை இயக்குகிறாராம். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல். வில்லனாக நடிக்க ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திடம் பேசி வருகிறார்களாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தமாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!