
திலீப் படம் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைத்த தமன்னா
அதுவரை திலீப் நடித்த படங்களை எல்லாம் தாண்டி மிகப்பெரிய வெற்றி பெற்று, திலீப்பின் முதல் 100 கோடி வசூல் படம் என்கிற பெருமையையும் பெற்றுத்தந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண்கோபி என்பவர் இயக்கியிருந்தார். அதன்பிறகு மோகன்லாலின் மகன் பிரணவை வைத்து அருண்கோபி இயக்கிய 21ஆம் நூற்றாண்டு படம் சரியாகப் போகவில்லை. இந்த நிலையில் மீண்டும் அருண்கோபிக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் திலீப். இது திலீப் 147வது படமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைக்கிறார் நடிகை தமன்னா. இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று(செப்., 1) நடைபெற்றது. இதில் தமன்னாவும், திலீப்புடன் சேர்ந்து கலந்து கொண்டார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, ஹிந்தியிலும் கூட படங்களில் நடித்துவிட்டார். ஆனால் அவர் திரையுலகிற்கு வந்து இத்தனை வருட காலத்தில் இப்போது தான் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கும் நேரம் வந்துள்ளது. புலிமுருகன் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!