
சினேகன் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன்: நடிகை ஜெயலட்சுமி ஆவேசம்
ஜெயலட்சுமி அளித்த பதில் புகாரில், சினேகம் என்ற அறக்கட்டளையை நான் நடத்தி வருகிறேன். அதன் மூலம் கிடைக்கும் நன்கொடைகளை சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறேன். இதற்கும் சினேகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டும் என்றே என்னை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் புகார் அளித்துள்ளார். போலி புகார் மூலம் என்னை புண்படுத்திய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
இருதரப்பிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காவல் ஆணையர் அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஜெயலட்சுமி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: சினேகன் நடத்தி வரும் அறக்கட்டளை பெயரில் நான் மோசடி செய்ததாக ஆதாரமற்ற புகார் அளித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் எனது தரப்பு விளக்கங்களை விசாரணை அதிகாரியிடம் அளித்துள்ளேன். சினேகன் புகார் அளித்து விட்டு அதற்கான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. சினேகனுடன் சமாதானமாக செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்துகின்றனர். ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையில் பேசிய சினேகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சினேகன் மீது நீதிமன்றத்தில் மனநஷ்ட வழக்கு தொடர்வேன். இவ்வாறு ஜெயலட்சுமி கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!