
கே.பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை : நோட்டீஸ் அனுப்பியது நடிகர் சங்கம்
அதில் கூறப்பட்டிருப்பதாவது: உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் தேர்தல் பற்றியும், நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறீர்கள், அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறீர்கள். இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி உள்ளீர்கள்.
இது சங்க விதிகளுக்கு முரணானது. தங்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க உறுப்பினர்களும் வற்புறுத்தி வருகிறார்கள். இது குறித்து செயற்குழுவில் ஆலோசித்து தங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தங்களை சங்கத்தில் இருந்து ஏன் நீக்க கூடாது. என்பதற்கு தங்கள் பதிலை 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாவிட்டாலோ, அல்லது தங்கள் பதில் திருப்தி அளிக்காவிட்டாலோ தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!