
பாரதிராஜா நலம் பெற பிரான்ஸில் வழிபட்ட ராதிகா
குறிப்பாக அவரால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணி கதாநாயகியாக வலம் வந்து, இப்போதும் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகை ராதிகாவிற்கும் இது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பிரான்சில் இருக்கும் ராதிகா அங்கே உள்ள லூர்து சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி பாரதிராஜா விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என பிரார்த்தித்துள்ளார்.
இது குறித்த வீடியோ ஒன்றையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ராதிகா, “என் இனிய டைரக்டர் பாரதிராஜா அவர்களே.. நீங்கள் விரைவில் நலம் பெற்று திரும்ப என்னுடைய சிறப்பு பிரார்த்தனை.. உங்களிடம் பேசுவதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார் ராதிகா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!