
8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி : தெலுங்குத் திரையுலகம் முடிவு
இந்நிலையில் ஓடிடி வெளியீடு உள்ளிட்ட பல விவகாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தெலுங்குத் திரையுலகில் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்தினார்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் காரணமாக தற்போது சில புதிய முடிவுகளை எடுத்துள்ளார்கள்.
அதன்படி, ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பின்பு நான்கு வாரங்களுக்குப் பதிலாக எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களுக்காகவும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்களாம். பேச்சு வார்த்தைகள் முடிவடைந்ததை அடுத்து இன்னும் நான்கைந்து நாட்களில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்களாம்.
தமிழ் சினிமாவில் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி என்ற முறைதான் உள்ளது. தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் மாற்றம் வந்துள்ளதை அடுத்து அது தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்குமா என்பது விரைவில் தெரியும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!